மாணவன் சிகிச்சை பலனின்றி மரணம்

மாணவன் சிகிச்சை பலனின்றி மரணம்

போலீசார் விசாரணை 

பணகுடி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலையில் காயமடைந்து மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் லிஜின் சான்(19). இவர் பணகுடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 3ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்ற லிஜின் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story