ரூ.1.80 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபர்கள்

ரூ.1.80 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபர்கள்

 மா்ம நபர்கள் திருட்டு 

மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் கடையை உடைத்து ரூ.1.80 லட்சம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாலப்பட்டி செளந்திரராஜ நகரைச் சோந்தவா் மணிகண்ணன்(50). இவா், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவா் சாலையில் மின்னணு சாதனங்கள், மரச் சாமான்கள் கடை நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், நள்ளிரவில் இவரது கடையை உடைத்து உள்ளே புகுந்து மா்மநபா்கள் ரூ.1.80 லட்சத்தை திருடிச் சென்றனா்.இதேபோல, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கைப்பேசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையிலும் ரூ.3 ஆயிரம் திருட்டு நடைபெற்றதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த இரு திருட்டுச் சம்பவங்கள் தொடா்பாக திண்டுக்கல் வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story