மொட்டை அடித்து துக்கம் அனுசரித்த கிராம மக்கள்

மொட்டை அடித்து துக்கம் அனுசரித்த கிராம மக்கள்

மொட்டை அடித்து துக்கம்

தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு மரணமடைந்தார். இதையொட்டி சென்னையில் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதி சடங்கு நடைபெற்றது. இதைபோல் திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியில் தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஜான் கென்னடி, வீரக்குமார் ஆகியோர் தலைமையில் உருவ படத்துடன் இறுதி ஊர்வலம் சசென்று அஞ்சலி செலுத்தினர். அதற்கு முன்னதாக தேமுதிக நிர்வாகிகளும், பொதுமக்களும் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தினர். இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story