நூலகம் அமைத்து தர எம்எல்ஏவிடம் மனு அளித்த கிராம மக்கள்.

நூலகம் அமைத்து தர எம்எல்ஏவிடம் மனு அளித்த கிராம மக்கள்.

நூலகம் கட்டிதர கோரிக்கை

நூலகம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக எம்எல்ஏ தெரிவித்தார்
நூலகம் அமைத்து தர எம்எல்ஏவிடம் மனு அளித்த கிராம மக்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தும்பிவாடி அருகே உள்ள புரவிபாளையம் காலனி பகுதியில் நேற்று நடைபெற்ற பூமி பூஜை விழாவில் பங்கேற்க அரவக்குறிச்சி எம் எல் ஏ இளங்கோ சென்றிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கந்தசாமி என்ற முதியவர் எம்எல்ஏவிடம் எங்கள் பகுதியில், டாக்டர், இன்ஜினியர், கல்லூரியில் படிக்கும் மாணவ - மாணவியர், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் பிளஸ் 2,பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவியர் என ஏராளமானோர் உள்ளனர். எனவே, எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் மேலும் கல்வி அறிவு பெறுவதற்கும், உலக நடப்புகளை அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக நூலகம் ஒன்றை அமைத்து தருமாறு அவர் எம்எல்ஏவிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ, ஆவண செய்வதாக தெரிவித்தார்.

Tags

Next Story