கோரிக்கை நிறைவேற்றிய எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள் !

கோரிக்கை நிறைவேற்றிய எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள் !

எம்எல்ஏ

20 வருடக் கோரிக்கை நிறைவேற்றி தந்த எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தாளப்பட்டி ஊராட்சியில் உள்ள செங்காளி பாளையத்தில், 2024-25 ஆம் ஆண்டுக்கான 15- வது நிதி குழு நிதியிலிருந்து, ரூபாய் எட்டு லட்சத்து ஐம்பதாயிரம். (8,50,000) மதிப்பில் நாடக மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எல்ஏ சிவகாமசுந்தரி பூமி பூஜையில் பங்கேற்று, நாடக மேடை அமைக்கும் பணிக்கான பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி வேலுச்சாமி, தாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லதா முருகேசன், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அன்பரசு, திமுக மாவட்ட துணை செயலாளர் பூவை ரமேஷ் பாபு, மாவட்ட பிரதிநிதி இரணியன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 வருடங்களாக நாடக மேடை அமைக்க கோரிக்கை விடுத்தோம். யாரும் செய்து கொடுக்கவில்லை. இப்போது, சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி எங்களது கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி தந்துள்ளார். எம்எல்ஏவுக்கு எங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

Tags

Next Story