கடனை திருப்பி கேட்ட பெண்ணிற்கு அடி உதை

கடனை திருப்பி கேட்ட பெண்ணிற்கு அடி உதை

கடனை திருப்பி கேட்ட பெண்ணிற்கு அடி உதை

வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நீலிக்கோனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் உமா.இவரிடம் இருகூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வீடு வாங்குவதற்கு கடனாக இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.வீடு வாங்காத நிலையில் பணத்தை திருப்பி தரும்படி உமா கேட்டுள்ளார். கார்த்திக் காலம் தாழ்த்தி வந்ததால் சம்பவத்தன்று அவரது வீட்டிற்குச் சென்ற உமா கார்த்திக் வீட்டில் இருந்த அவரது தந்தையிடம் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.அச்சமயம் அங்கு வந்த கார்த்திக்கின் அண்ணன் சுரேஷிற்கும் உமாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ் உமாவை எட்டி உதைத்து அவரது உடைகளை கிழித்து கீழே தள்ளி உள்ளார்.இதுகுறித்து உமா தனது மகனிடம் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது மகனியும் சுரேஷ் தாக்கியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.இருவரும் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உமா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story