ஸ்கூட்டர் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

ஸ்கூட்டர் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

பைல் படம் 

திருவொற்றியூரில் ஸ்கூட்டர் திருடிய வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த், 24. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே தன் ஸ்கூட்டரை நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலையில், இரு வாலிபர்கள் ஸ்கூட்டரை திருடிய போது, அங்கிருந்தோர் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு கூடிய அப்பகுதியினர், வாலிபர்களை சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் தப்பிவிட, மற்றொருவர் சிக்கினார். அவரை 'நையப்புடைத்து' போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர் மணலி, சின்னசேக்காடைச் சேர்ந்த சத்யா, 18, என தெரிந்தது. பொதுமக்கள் தாக்கியதில் லேசான காயமடைந்த அவரை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story