சேசம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

சேசம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

பைல் படம்

சேசம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு செயின்,மோதிரம் என 6 பவுன் நகைகள் மற்றும் 25ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி வட்டம் சேசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி ரேவதி இவருக்கு வயது 32. இவர் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக ரேவதிக்கு போன் வந்தது.

இதையடுத்து வீட்டுக்கு அவர் விரைந்து சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த செயின், மோதிரம் என 6 பவுன் நகைகள் மற்றும் 25ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது பற்றி அவர் நேற்று மாலை அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story