மளிகைக் கடையில் மேற்கூரையை பிரித்து திருட்டு

மளிகைக் கடையில் மேற்கூரையை பிரித்து திருட்டு

பைல் படம் 

தூத்துக்குடியில் மளிகைக் கடையின் மேற்கூரையை பிரித்து பொருள்களை திருடியவா்களை போலீசார் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள முள்ளக்காடைச் சோ்ந்த பாண்டியராஜ் மகன் கணேசன்(54). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த 14ஆம் தேதி தனது கடையை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டார். சம்பவத்தன்று ஊர் திரும்பிய அவர் கடைக்கு வந்தபோது, மேற்கூரை உடைக்கப்பட்டு கடையில் இருந்த பீடி, சிகரெட், மளிகைப் பொருள்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தனவாம். இதுகுறித்து புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story