விவசாய கிணற்றில் மின் மோட்டார் திருட்டு

பெரியபட்டியில் விவசாய கிணற்றில் மின் மோட்டார் திருடப்பட்டது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டப்பட்டி அருகே உள்ள பெரியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சோலையப்பன் இவருடைய கிணற்றில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் நேற்று திருடி சென்றனர். இது குறித்து அவர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கோட்டப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மின் மோட்டாரை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story