கடத்தூர் அருகே வீட்டிலிருந்த பணம் ,நகை திருட்டு - போலீசார் விசாரணை

கடத்தூர் அருகே வீட்டிலிருந்த பணம் ,நகை திருட்டு -  போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

கடத்தூர் அருகே தாளநத்தத்தில் வீட்டிலிருந்த ரூ.52 ஆயிரம் பணம் மற்றும் 13 பவுன் தங்க நகை திருடு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர், தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் மகன் தீர்த்தமலை இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் காயம் அடைந்த தீர்த்தமலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனது மனைவியிடம் வீட்டில் இருந்து சிகிச்சை செலவுக்கு பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார். அவரது மனைவி வீட்டிற்கு சென்று பார்த்த போது 52,000 ஆயிரம் மற்றும் 13 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. சிகிச்சை முடித்து வந்து தீர்த்தமலை இது குறித்து கடத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் கடத்தூர் உதவி காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags

Read MoreRead Less
Next Story