மேல கேமரா இருக்குதுப்பா திருடி மாட்டிக்காத பொலந்துடுவாங்க:வீடியோ வைரல்

மேல கேமரா இருக்குதுப்பா திருடி மாட்டிக்காத பொலந்துடுவாங்க:வீடியோ வைரல்
கல்லாவில் கை வைக்கும் நபர்
வாணியம்பாடி பகுதியில் பாஸ்ட்புட் கடையில் பரோட்டோ வாங்க வந்துட்டு கல்லாவில் கை வைத்த நபரை மேல கேமரா இருக்குதுப்பா திருடி மாட்டிக்காத பொலந்துடுவாங்க என கூறிய உரிமையாளர் திகை திகைத்து நின்ற அந்த நபர், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

திரும்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை கூட்ரோடு பகுதியில் அப்துல் மஷித் என்பவரின் மகன் ரிஷ்வன் வயது 37 என்பவருக்கு சொந்தமான பாஸ்ட் புட் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு அந்த பாஸ்ட் புட் கடைக்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் உணவு வாங்குவதற்காக வந்து பரோடா கேட்டுள்ளார்.

அப்போது கடையில் சிலிண்டர் காலி ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் ரிஸ்வன் சிலிண்டரை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். உரிமையாளர் கவனிக்கவில்லை அந்த நபர் கல்லாவை திறந்து பணம் திருட முயற்சித்து உள்ளார். அதை நோட்டமிட்ட கடையின் உரிமையாளர் பணம் திருட முயற்சித்த நபரை அடிக்காமல் மேல கேமரா இருக்குதுயா கேமராவல தேரியும் திருடி மாட்டிக்க போற போலந்துருவாங்க என அசால்டாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்தவர் மதில் சிரிப்பை வரவழைத்தது.திருட முயற்சித்த அந்த நபர் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் நின்றார்.இது குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரின் மத்தியில் சிரிப்பை வரவழைத்துள்ளது.

Tags

Next Story