இரவில் ஒலித்த ஏ.டி.எம் அலாரத்தால் பரபரப்பு .

இரவில் ஒலித்த ஏ.டி.எம் அலாரத்தால் பரபரப்பு .
பைல் படம்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் நிலையம் அருகே தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி உள்ளது. அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் அந்த ஏ டிஎம் மையத்தில் இருந்து திடீரென அலாரம் ஒலித்தது. அலாரத்தின் சத்தத்தை கேட்டு போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் வங்கியில் ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக நினைத்து ஓடி சென்று பார்த்துள்ளனர். ஆனால் அந்த நேரம் வங்கியிலும், ஏடிஎம் இருந்த இடத்திலும் யாரும் இல்லை. இந்த நிலையில் இந்த சத்தத்தை கேட்டு, அருகே தங்கியிருந்த வங்கி ஊழியர் ஒருவர் ஏடிஎம் இயந்திரம் இருந்த இடத்தில் வந்து சோதனை செய்து அலாரத்தை ஆப் செய்தார். மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அலாரம் ஒலித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸ் நிலையம் அருகே இரவு வேலையில் திடீரென ஏடிஎம் இயந்திரத்தில் அலாரம் ஒலித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story