மினி லாரி அதிகம் பாரம் ஏற்றி வந்ததால் போக்குவரத்து நெரிசல் !

மினி லாரி அதிகம் பாரம் ஏற்றி வந்ததால் போக்குவரத்து நெரிசல் !
போக்குவரத்து நெரிசல்
ஆலங்குளத்தில் மினி லாரி அதிகம் பாரம் ஏற்றி வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பல வாகனங்கள் அதனை மீறி வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. இதில் சாம்பவர்வடகரை ரோட்டில் வந்த வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த சாலைகளில் பேருந்து வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில் காணப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story