தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் !

தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் !

தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம்வடகரையில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம்வடகரையில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்துக்கு நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால்,ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஊர்வலம் வடகரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடங்கி மெயின்ரோடு வழியாக வடகரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது.பின்னர் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாறன்,ஊராட்சி செயலர் பிரகாஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள்,அலுவலகபணியாளர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story