பணம் கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பணம் கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பைல் படம் 

திருவாலங்காடு அருகே பெண்ணிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாலங்காடு பவானி நகரை சேர்ந்தவர் குமார் மனைவி தீபா, 32. இவர் கடந்த, 5 ஆண்டுகளாக பழையனுார் பேருந்து நிறுத்தம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த திருவாலங்காடு தெற்கு மாடவீதியை சேர்ந்த சரத்குமார், 32, என்பவர் தீபாவிடம், 500 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். தீபா மறுத்ததால் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் தீபா புகார் அளித்தார். போலீசார் சரத்குமாரை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story