தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா!

தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா!

முப்பெரும் விழா

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது .

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்கப்பள்ளியில் காவேரிப்பாக்கம் வட்டார தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்க கொடி ஏற்றுதல், பணி நிறைவுபெறும் மற்றும் அறிஞர் அண்ணா விருது தலைமைத்துவ விருது பெற்றமைக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ரா.தாஸ், மாவட்ட செயலாளர் பா.பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு, பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள் பெருவளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வில்சன், கரிவேடு எம்.டி. நிதியுதவி ஆரம்பப்பள்ளி ஜெகதாள் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். காவேரிப்பாக்கம் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வ.கோதை, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினார்.இதில் ஆசிரியர்கள் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story