சொகுசு காரில் டீசல் கடத்தி வந்த மூன்று பேர் கைது

சொகுசு காரில் டீசல் கடத்தி வந்த மூன்று பேர் கைது

கைது

நாகை மாவட்டம் நாகூர் வாஞ்சூர் சோதனை சாவடி அருகே சொகுசு காரில் டீசல் கடத்தி வந்த மூன்று பேர் கைது
நாகை மாவட்டம் நாகூர் வாஞ்சூர் சோதனை சாவடி அருகே சொகுசு காரில் டீசல் கடத்தி வந்த மூன்று பேர் கைது நாகை மாவட்டம் நாகூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாஞ்சூர் சோதனை சாவடி பகுதியில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் காரைக்காலில் இருந்து 600 லிட்டர் டீசல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் காரில் டீசல் கடத்தி வந்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ராமன் நாகூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் பூதங்குடி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கடத்தி வரப்பட்ட 600 லிட்டர் டீசல் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story