திருவல்லிக்கேணி தேர்தல் பணிமனை திறப்பு !

திருவல்லிக்கேணி தேர்தல் பணிமனை திறப்பு !

தேர்தல் பணிமனை திறப்பு

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் திமுக தலைமை தேர்தல் பணிமனையை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் நிலைக்குழுத் தலைவருமான நே. சிற்றரசு , பகுதிக் கழகச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி துணைத்தலைவருமான ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சி.ஹெச்.சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.பிரகாஷ், மாமன்ற உறுப்பினர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story