செஞ்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி !

செஞ்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி !

பயிற்சி

விழுப்புரம் மாவட்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் செஞ்சியில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு ஆரணி நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். செஞ்சி தாசில்தார் ஏழுமலை,தனி தாசில்தார்கள் செல்வகுமார், துரைச்செல்வன், புஷ்பாவதி, தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கட்டுப்பாட்டு எந்திரத்துடன் எவ்வாறு இணைப்பது, வி.வி.பேட் எந்திரத்தின் செயல்பாடுகள், வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென பழுதடைந்தால் உடனடியாக செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்கு எண்ணும் மையங்களிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story