ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே டிரான்ஸ்பர்! -TNROA பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

சென்னையில் நடைபெறும் சங்கத்தின் வைரவிழாக்கொண்டாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வருவாய் துறை அலுவலர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு வருவாய்த் துறைஅலுவலர் சங்கத்தின், மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, மாநில துணைத் தலைவர்கள் அர்த்தனாரி, குமரேசன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் பொதுக் கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அடிக்கடி இடமாற்றம் செய்வதை தவிர்த்து, ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே மாறுதல் அளிக்க வேண்டும். சென்னையில் நடைபெறும் சங்கத்தின் வைரவிழாக் கொண்டாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வருவாய் துறை அலுவலர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், வருவாய்த் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story