காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது

காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது

காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது

சொரகுளத்தூர் பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவரிடம் பன்றி, வெடிகுண்டு, வாகனம் கைப்பற்றி அவர்களை கைது செய்தனர்.
திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் G.P.சரவணன் தலைமையில் பிரிவு வனவர் சிவக்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் மருவரசன், சிரஞ்சீவி, வெற்றிவேல், சம்பத் அடங்கிய குழு சொரகொளத்தூர் கிழக்கு பீட்டில், பாலேரி சராகத்தில் ரோந்து பணியின் போது காட்டுப்பன்றியை வேட்டையாடிய கொண்டம் பகுதியைச் சேர்ந்த தங்கம், சஞ்சய் இருவரிடமிருந்து ஒரு காட்டுப்பன்றி மற்றும் ஆறு நாட்டு வெடிகுண்டுகள், ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றினார். அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story