புகையிலைப் பொருட்கள் விற்ற இருவர் கைது!

புகையிலைப் பொருட்கள் விற்ற இருவர் கைது!

புகையிலைப் பொருட்கள் விற்ற இருவர் கைது!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு பதிவு. மேலும் 78 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இலுப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் இலுப்பூர் கடைவீதி, மற்றும் முஸ்லீம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைவீதி பகுதியில் புகையிலை விற்ற கிருஷ்ணமூர்த்தி மற்றும் முஸ்லீம் தெருவில் புகையிலை விற்ற சிமில்கனி ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 78 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story