காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

கோவையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை:D1 ராமநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் பொத்துராஜ் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள மதுபான கடை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்தவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். அப்போது அங்கிருந்து நகர மறுத்து இருவர் நின்று கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவர்களை அங்கிருந்து செல்ல கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும் காவலர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன் ரோந்து பணியில் இருந்த காவலர் பொத்துராஜின் சட்டையை பிடித்து இழுத்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வரும் குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அகமது சேட் என்பதும் மற்றொருவர் உக்கடம் லக்‌ஷ்மி நாயக்கர் வீதியை சேர்ந்த அப்பாஸ் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story