குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

 சிறுமிகள் பலி

திண்டுக்கல் அருகே தாயின் கண் முன்பே குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலியாயினர்.
திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அவர்களின் மகள்கள் ரோகினி,ஹரிணி இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி குளத்தில் விழுந்து மூழ்கினர். உடனடியாக குழந்தைகளின் அம்மா செய்வது அறியாமல் திகைத்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் குளத்தில் இறங்கி 2 குழந்தையும் மீட்டனர். ஆனால் ரோகிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.ஹரிணி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story