வேன் கார் மோதி விபத்து - இரண்டு பேர் படுகாயம்

தாராபுரம் அருகே வேன் மற்றும் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அலங்கியம் போலீசார் விசாரணை
தாராபுரம் அருகே மணக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் சாமுவேல் வயது 73 இவர் வேன் வைத்து வாடகைக்கு செல்வது வழக்கம் . இந்நிலையில் தாராபுரம் அருகே தேர்பட்டி அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது எதிரே திருப்பூரில் இருந்து பழனியை நோக்கி வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக வேன்மிது மோதியது. இதில் வேன் கவிழ்ந்தது. பின்னர் கார் கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ஸ்டாலின் சாமுவேல் மற்றும் கார் டிரைவர் திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிபாளையத்தை சேர்ந்த நவீன் கிருஷ்ணாவுக்கும் காயங்கள் ஏற்பட்டது .அருகில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அலங்கியம் காவல்துறைவழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story