டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து இருவர் உயிரிழப்பு

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து இருவர் உயிரிழப்பு

பைல் படம்

தர்மபுரி அருகே டிராக்டர் இது இருசக்கர வாகனம் மோதி விபத்து இருவர் உயிரிழந்தனர். இதுக்குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்டவர் சாதிக் பாஷா இவர் ஓட்டுநராக உள்ளார் அதே பகுதியை சேர்ந்த மபூப் இவர்கள் இருவரும் ரம்ஜான் தொழுகைக்கு செல்வதற்காக நேற்று பாலக்கோட்டில் இருந்து தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பென்னாகரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாதிக் பாஷா ஆட்டுக்காரன்பட்டி அருகே சென்றபோது முன்னாள் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயற்சி செய்தபோது வந்து டிராக்டரின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் மோதியதில் சாதிக் பாஷா, மபூப் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் விட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி நகர காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story