கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

கல்வராயன்மலை பகுதியில் சாராயம் கடத்தி சென்ற இரண்டு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கபிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், கல்வராயன்மலையில் இருந்து ஆத்துார் செல்லும் இணைப்பு சாலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த, யமகா பைக்கினை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தெருப்புளி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் காமராஜ்,45; பெருமாள் மகன் அருள்,32; ஆகிய இருவரும் லாரி டியூப்பில் சாராயம் கடத்தி சென்றது தெரிந்தது. தொடர்ந்து, இரண்டு பேரையும் கைது செய்து 60 லிட்., சாராயம் மற்றும் பைக் ஆகியவற்றை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story