மீனவரை கொலை செய்ய முயன்ற இருவர் கைது

மீனவரை கொலை செய்ய முயன்ற இருவர் கைது

கொலை முயற்சி

தூத்துக்குடியில் மீனவரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி திரேஸ்வரம் மாதவன் நாயர் காாலனியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் முனியசாமி (36). அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தமிழ்செல்வன் (20), இசக்கியப்பன் மகன் முனீஸ்வரன் (21). இவர்கள் மூவரும் நண்பர்கள், மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், முனீஸ்வரன் ஆகிய இருவரும் முனியாண்டியை அரிவாளால் வெட்டினார்கள். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, தமிழ்ச்செல்வன் மற்றும் முனீஸ்வரன் ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story