டூவீலர்கள் மோதல் விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

குமரபாளையத்தில் டூவீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தார்.

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் விசைத்தறி கூலி தொழிலாளி உயிரிழந்தார் . குமாரபாளையம் ஆனங்கூர் சாலை காந்தி நகரில் வசிப்பவர் நல்லதம்பி, 52. விசைத்தறி கூலி. இவர் நேற்று முன்தினம் இரவு 07.25 மணிக்கு, கோட்டைமேடு பகுதியில் தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில், தன் மனைவி அமுதாவுடன் சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்ற டூவீலர் ஓட்டுனர் எதிர்பாராதவிதமாக வலது புறம் திரும்பியபோது, இவரது டூவீலர் மீது மோதியதில், கணவனும், மனைவியும் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, இவர்களை பரிசோதித்த மருத்துவர், நல்லதம்பி வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story