டூவீலர் மீது கார் மோதி விபத்து - பெண்கள் படுகாயம் !

டூவீலர் மீது  கார் மோதி விபத்து - பெண்கள் படுகாயம் !

விபத்து

இரு பெண்கள் சென்ற டூவீலர் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
இரு பெண்கள் சென்ற டூவீலர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து. பெண்கள் படுகாயம். கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, ஆச்சி மங்கலம் அருகே உள்ள அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி நல்லம்மாள் வயது 52. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி நிர்மலா வயது 49, ஆகிய இருவரும் மார்ச் 19ஆம் தேதி காலை 6:20 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். டூவீலரை நல்லம்மாள் ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் சுக்காலியூர் ஜே.கே டயர் கடை அருகே சென்றபோது, அதே சாலையில், திருச்சி மாவட்டம், துறையூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்தி வயது 26 என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார், நல்லம்மாள் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்ததால் நல்லம்மாள் மற்றும் நிர்மலா ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த நிர்மலா, காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சக்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story