சிந்தாமணி கோயிலில் வருஷாபிஷேகம்

சிந்தாமணி கோயிலில் வருஷாபிஷேகம்
சிந்தாமணி கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம், சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோயிலில் நடைப்பெற்ற வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்ப ஜெபம், ஹோமபூஜை, அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி - அம்பாள், பரிவார மூா்த்திகள், விமானங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதை, காா்த்திகேயன் பட்டா் நடத்தினாா். முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் சித்துராஜ், பிரதோஷ கமிட்டி தலைவா் குமாா், ஆன்மிக ஆா்வலா்கள் கணேசன், செல்லத்துரை, செல்வநாராயணன், மரியதாஸ், பால்ராஜ், வைத்திலிங்கம், ஆவுடையப்பன், வெங்கடேசன், கண்ணன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story