ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் நடத்தும் விளக்கு பூஜை

ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் நடத்தும் விளக்கு பூஜை

குத்துவிளக்கு பூஜை

பலர் ஆர்வமுடன் சாமி தரிசனம் செய்தனர்

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் உள்ள ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவில் அருகே ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் குருமார்கள் மற்றும் பக்தர்கள் நடத்தும் மூன்றாம் ஆண்டு குத்து விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை டிசம்பர் ஒன்றாம் தேதி, தான்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகர் முதல் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் முன்பாக 7 சக்தி கண்ணிகளுக்கு அருள் அளித்து நெய்விளக்கு ஏந்தி ஸ்ரீ ஐயப்பன் ஆழி ஊட்டப்படும். இந்த நிகழ்ச்சிகளில் பொன் பாண்டுரங்க குருசாமி, விவிபி ராஜா லந்தகோட்டை பிச்சை குருநாதர் துணை குருநாதர் கருப்பசாமி ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நாளை மாலை 5 மணிக்கு ஆழி யாகம் நடத்தப்படும்.

இந்நிகழ்வுகளை தொடர்ந்து ஆறாம் ஆண்டு பூக்குழி ஆழி திருவிழாவும் நடைபெறும் எனவும் ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவில் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற குத்து விளக்கு பூஜைக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் குருமார்கள் மற்றும் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மலை ஹைடெக் கருப்பசாமி மற்றும் ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story