தூத்துக்குடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது. இதை ஒட்டி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் 1624 வாக்குச்சாவடிகளில் 288 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என்ற கண்டறியப்பட்டு மாவட்ட முழுவதும் 1057 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு இணையதளம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் 3500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் வாக்குச்சாவடி மையங்களில் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் காலை முதற்கட்டமாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது இதை அடுத்து மாதிரி வாக்குப் பதிவில் வாக்குப்பதிவு முறையாக நடைபெற்றதா என்பதை பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர் ஒப்புகை சீட்டை வைத்து சரிபார்த்தார் இதைத் தொடர்ந்து அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குப் பதிவிற்கு தயார் நிலையில் உள்ளன

Tags

Read MoreRead Less
Next Story