பி.டி.ஓ. அலுவலகத்தில் வீணாகும் இரும்பு கம்பிகள்

பி.டி.ஓ. அலுவலகத்தில் வீணாகும் இரும்பு கம்பிகள்

பிடிஓ அலுவலகத்தில் வீணாகும் கம்பிகள்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி போடப்பட்டுள்ள கம்பிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் பயனாளிகள் வீடு கட்டுவதற்கான கம்பிகள் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு வழங்கப்படும் இரும்பு கம்பிகள், ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில் உள்ள, ஸ்ரீபெரும்புதுார் வட்டாரவளர்ச்சி அலுவலக வளாகத்தில் திறந்த வெளியில் பாதுகாப்பு இல்லாமல் மண் தரையில் போடப்பட்டுள்ளன. இவை, மழை, வெயிலில் காய்ந்து, காற்றின் ஈரப்பதம் காரணமாக கம்பிகள் துருப்பிடித்து, நாளடைவில் கம்பிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்த கம்பிகளை பயன்படுத்தி பயனாளிகள் வீடு கட்டினால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி போடப்பட்டுள்ள கம்பிகளை கிடங்கில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story