கோடையில் வீணாகும் குடிநீர் ஊராட்சியில் அவலம்

கோடையில் வீணாகும் குடிநீர் ஊராட்சியில் அவலம்

கோடையில் வீணாகும் தண்ணீர் 

தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சியில் உரிய பராமரிப்பின்றி நீர்தேக்க தொட்டியில் இருந்து நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அதனை சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சியில், அத்திவாக்கம் கோட்டூரில் உள்ள சத்துணவுக் கூடம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதில், ஊராட்சிக்கான நீரேற்றல் மற்றும் பகிர்வு பணி உரிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக, குடிநீர் வீணாகி அருகில் உள்ள கால்வாயில் பாய்கிறது. இதில், சிறுவர்கள் குளிக்கச் சென்றால், எதிர்பாராத விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் பலமுறை புகார் அளித்தும், ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது.

கோடையில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்லும் நிலையில், சேதமடைந்த குழாயை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story