தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது ரயில் மோதி டெய்லர் பலி !

தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது   ரயில் மோதி டெய்லர் பலி !

டெய்லர் பலி

ஆறுமுகநேரியில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, ரயில் மோதி டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் (58). தையல் தொழிலாளி. இவருக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது வீடு, ஆறுமுகநேரி- காயல்பட்டினம் இடையிலான ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ளது. நேற்று காலை 8.30 மணியளவில் ரமேஷ் தனது வீட்டின் அருகில் உள்ள தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றார். அப்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற ரயில் ரமேஷின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் ரயில்வே போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story