போலீசாரை அவதூறாக பேசிய பெண் கைது!

போலீசாரை அவதூறாக பேசிய பெண் கைது!

பெண் கைது

காட்பாடி அருகே காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரை அவதூறாக பேசிய பெண்ணை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரிகிரி லட்சுமிபுரத்தை சேர்ந்த மலர் இவர் வேலூர் (இஎஸ்ஐ)அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார் கடந்த (27:03:2024) அன்று மாலை திருவலம் காவல் நிலையத்திற்கு சென்று காவல் உதவி ஆய்வாளர் பிரகாசம் மற்றும் காவலர்கள் பெண் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து உதவி ஆய்வாளர் பிரகாஷ் மலர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் லட்சுமிபுரத்தில் அருகே உள்ள கோவில் அருகில் பெண் காவலர்கள் உதவியுடன் மலரை கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story