குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை

தற்கொலை 

திருநெல்வேலி மாவட்டம், விகேபுரம் பகுதியில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், விகேபுரம் குறிஞ்சி மலர் தெருவை சேர்ந்தவர் ஷேக் திவான் மைதீன். இவரது மனைவி செய்யது அலி பாத்திமா. கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் செய்யது அலி பாத்திமா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விகேபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story