இளம்பெண்கள் மாயம்

இளம்பெண்கள் மாயம்

இளம்பெண் மாயம் 

திருமயம் பகுதியில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமயம் அருகே உள்ள ராயவரத்தை சேர்ந்தவர் வெள்ளச்சாமி மகள் வயது(19). புதுக் கோட்டை அருகே உள்ள கல்லுாரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லுாரிக்கு சென்ற சந்தியா மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் அரிமளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமயம் தாலுகா பூனையன் குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன் மனைவி பாண்டிமீனா (33). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அரிமளத்துக்கு கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற பாண்டிமீனா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி கே.புதுப் பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story