கட்டுமான பொருட்களை திருடி சென்ற பெண்கள் கைது

கட்டுமான பொருட்களை திருடி சென்ற பெண்கள் கைது

கட்டுமான பொருட்களை திருடி சென்ற பெண்கள் கைது

கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூரில் வீட்டின் கட்டுமான பொருட்களாய் திருடிய பெண்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரேணுகாதேவி தனது குடும்பத்தினருடன் ஒண்டிப்புதூர் விஐபி நகர் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் புதிதாக கட்டி வரும் வீட்டின் உள்ளே மின்சாதன பொருட்கள், கதவின் கைப்பிடிகள், உள்ளிட்ட பொருட்களை வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் புதிதாக கட்டப்படும் கட்டிடத்திற்குச் சென்றவர் உள்ளே சென்று பார்த்தபோது கட்டுமான பொருட்கள் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ரேணுகாதேவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காமாட்சிபுரம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த தேவி மற்றும் ஒண்டிப்புதூர் சத்யா நகரைச் சேர்ந்த சரஸ்வதி ஆகியோரை விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது இருவரும் எனத் தெரிய வந்ததை தொடர்ந்து அவர்களிடம் இருந்த பொருட்கள் மீட்ட போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story