குமரி அருகே இளம் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்

குமரி அருகே இளம் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்
பைல் படம்
குமரி மாவட்டம் கேசவன் புதூர் பகுதியில் மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

குமரி மாவட்டம் கேசவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜி (34). இவர் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சந்தியா (27) அந்த பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். விஜி வெளியூருக்கு வேலைக்கு செல்லும் நேரங்களில் சந்தியாவை கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள அவரது தோழி ஒருவரின் வீட்டில் விட்டு விட்டு செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த மாதம் 26 ஆம் தேதி சந்தியாவை அவரது தோழியின் வீட்டில் விட்டுவிட்டு விஜி வேலைக்கு சென்றார். பின்னர் கடந்த 31 ஆம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது சந்தியாவை காணவில்லை. இது குறித்து சந்தியாவின் தோழியிடம் விசாரித்த போது, தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றதாக தெரிவித்தார்.

தொடர்ந்து சந்தியாவின் தங்கையிடம் வீட்டில் சென்று விசாரித்த போதும் சந்தியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து விஜி கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியாவை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story