பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடந்த யோகா நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தை முன்னிட்டு பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளாகத்திலுள்ள முத்தமிழ்க் கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் என்.சி.சி. மாணவர்கள் தனுராசனம், புஜங்காசனம், தடாசனம், முட்டி யாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்துக் காட்டினர். என்.சி.சி அலுவலர் சரவணன் சரவணன் சிரசாசனம் செய்துக் காட்டினார். இதில் உதவித் தலைமையாசிரியர் லோக நாதன், உடற் கல்வி இயக்குநர் முருகானந்தம், உடற் கல்வி ஆசிரியர் செல்வக் குமார், பட்டதாரி ஆசிரியர் ராம் குமார் உட்பட பங்கேற்றனர்.

Tags

Next Story