இளைஞர் போக்சோவில் கைது!

இளைஞர் போக்சோவில் கைது!

கோப்பு படம்

கீழ்பென்னாத்தூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துார் அடுத்த கல்லாய் சொரத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 22) .இவர் பிளஸ் 2 படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். இந்நிலையில், கடும் வயிற்று வலியால் துடித்த சிறுமி, வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து திருவண்ணாமலை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிதாசை போக்சோவில் கைது செய்தனர்.

Tags

Next Story