கொல்லங்கோடு அருகே இளம்பெண் மாயம்

கொல்லங்கோடு அருகே இளம்பெண் மாயம்
பைல் படம்
கொல்லங்கோடு அருகே சூசைபுரம் காலனியை சேர்ந்தவர் ஷாஜு, காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூசைபுரம் காலனியை சேர்ந்தவர் ஷாஜு (45). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஷைனி (36). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. ஆனால் இதுவரையிலும் குழந்தைகள் இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு ஷாஜு சவாரிக்கு போய்விட்டு, வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஷைனியை திடீரென காணவில்லை. போனில் அவரை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதை அடுத்து உறவினர்கள் வீடுகளில் தேடியும் ஷைனி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசில் ஷாஜு புகார் செய்துள்ளார். காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story