சலூன் கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது

சலூன் கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது

வாலிபர் பலி

சேலம் மாவட்டம், வீராணம் டி, பெருமாபாளையம் பகுதியில் மதுபோதையில் வந்து முடிவெட்ட கூறி சலூன் கடைக்காரரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ள வீராணம் டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 34). இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 14-ந் தேதி இரவு 8.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு செல்லும் நேரத்தில் அங்கு அதே பகுதியை சேர்ந்த நடராஜ் (24) என்பவர் வந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தனக்கு உடனே முடிவெட்டுமாறு கூறி கடைக்காரர் கதிர்வேலிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு கதிர்வேல் அவரிடம் நீங்கள் காலையில் வருமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ் அவரை சரமாரியாக தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் கதிர்வேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடராஜை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story