அம்பையில் மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருநெல்வேலி மாவட்டம், அம்பையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள முதலியார்பட்டியை சேர்ந்தவர் முகமது யூசுப்.இவரது மகன் முகமது முபித் (25) நேற்று (பிப்.25) மாலை குளியலறையில் உள்ள மின் விளக்கை சரி செய்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு அம்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அம்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story