விபத்தை ஏற்படுத்திய இளைஞர் கைது - போலீசார் விசாரணை

விபத்தை ஏற்படுத்திய இளைஞர் கைது - போலீசார் விசாரணை

 இளைஞர் கைது

காரைக்குடியில் அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் மதுபான கூடத்தில், கஞ்சா அடித்து விட்டு போதை பத்தாமல் மது அருந்திய மதுரையைச் சேர்ந்த சிவராஜ் என்கிற இளைஞர் போதையில், தான் ஓட்டி வந்த காரை அதிவேகமாக ஓட்டி சென்றே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதிவிட்டு, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீதும் மோதிவிட்டு, அதன் பின்பு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து மீதும் மோதியதில் நிலை தடுமாறி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள தேவர் சிலைபீடத்தில் மோதியதில் காரில் இருந்த பலூன் திறந்ததால் கஞ்சா மது போதை இளைஞர் உயிர் தப்பினார். அவரை விரட்டி வந்த இளைஞர்கள் அவரை காரில் இருந்து தரதரவென்று இழுத்து வந்து சாலை ஓரம் வைத்து நையப்படைத்தனர். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வடக்கு காவல்துறையினர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த சிவராஜை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஓட்டி வந்த காரை காவல் நிலையம் எடுத்து சென்றனர். விபத்து குறித்து காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ் விசாரணை செய்து வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story