நவ 11 வரை தொடரும் கனமழை
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 9ம் தேதி இலங்கைக் கடற்கரையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் இடியுடன் கூடிய மிதமான மழையும், அதன் பிறகு இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும். நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையானது நவம்பர் 11 ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
/>
/>