உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்களுக்கான மராத்தான் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு ராஜேஸ்குமார் பரிசு வழங்கினார்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாமகிரிப்பேட்டை பேரூர் திமுக இளைஞர் அணி சார்பாக ஆண்களுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டி துவக்க விழாவை ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.இராமசுவாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினார்.
கே.ராமசாமி நினைவு கோப்பையுடன் ரூ. 1000 மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
/>
/>